ARTICLE AD BOX
சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கரன் உள்பட 1000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, அமைச்சர் சிவசங்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். முன்னதாக நீதிபதி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதில் உடனடி அபராதம் விதிக்கலாமே என அரசுக்கு யோசனை தெரிவித்தார்.
The post அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உடனடி அபராதம் விதிக்கலாம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை appeared first on Dinakaran.