அதிமுக-வில் ரீ- என்ட்ரி… பணத்தை இறக்கும் சசிகலா… மனம் இறங்கும் எடப்பாடியார்..!

1 day ago
ARTICLE AD BOX

‘எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியைப் போல் இருந்தால், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கத்தயார்’ என எடப்பாடி கூறியிருந்த நிலையில், சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனதை மாற்றி சசிகலாவை ரீ என்ட்ரி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் சிலர், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துக் கொண்டார். அந்தநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த வேலுமணி, தங்கமணி, தர்மபுரி கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் மிகவும் துணையாக இருந்தனர்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவு – சசிகலா இரங்கல்

கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். முதற்கட்டமாக 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை கொண்டு வர முடிவு செய்தார். இதன்மூலம் அத்தொகுதியிலேயே அவர்களுக்கு ஒரு சீட் கொடுப்பதன் மூலம் மிகுந்த ஆர்வமுடன் கட்சி வேலையில் ஈடுபடுவார்கள். இதை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என திட்டமிட்டார். ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் பலரும் ஒத்துழைக்கவில்லை.

குறிப்பாக கொங்கு பகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இதற்கு உடன்படவில்லை. தங்களின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நினைத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமியால் நினைத்ததை செய்ய முடிவில்லை. இவர்களை எதிர்த்தால் கட்சியில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என நினைத்து மாவட்ட செயலாளர் நியமன முடிவை கைவிட்டுவிட்டார். அடுத்ததாக பாஜவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதோடு ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் கட்சியில் இணைத்தே ஆகவேண்டும் என்பதில் கொங்கு நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போதிய பணம் தங்களிடம் இல்லை என எடப்பாடி பழனிசாமியிடம் கைவிரித்து விட்டனர். சசிகலாவை கட்சியில் சேர்ப்பதன் மூலம் தேர்தலுக்கான செலவுகளை அவரே கவனித்துக்கொள்வார். அதில் எந்த பிரச்னையும் நமக்கு கிடையாது என வேலுமணி தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர். சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்தால் அவர்கள் குடைச்சல் கொடுப்பதுடன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வைத்து நிர்வாகிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்.

நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எடப்பாடி தெரிவித்தும் அதுபோன்று எதுவும் நடக்காது என உறுதி கூறியுள்ளனர். இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார். இதற்கிடையில் எந்த வம்பு தும்புக்கும் போகாத செங்கோட்டையனை களம் இறக்கியதும் கொங்கு மண்டல நிர்வாகிகள் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துபோனது. இப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

தவிர, அதிமுகவில் புதிய பதவிகளை கொண்டு வந்து புதுரத்தம் பாய்ச்ச வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் மூத்த நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி நிர்வாகிகளை நியமித்தால் கோஷ்டி மோதல் ஏற்படும். ஆங்காங்கே பிரச்னையை கிளப்பி விடுவார்கள். தன்னுடன் இருப்பவர்களில் உண்மையாக இருப்பது யார்? குழி பறிப்பவர்கள் யார்? என்பதை எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார். என்றாலும் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்’’ என்றனர்.

 

Read Entire Article