ARTICLE AD BOX
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன், ஏற்கனவே நகைகளை திருடி விற்று மாடி கட்டியது அம்பலமாகியுள்ளது. நகையை திருடி விற்ற பணத்தில் கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டின் 3வது தளத்தை ஞானசேகரன் கட்டியுள்ளார். திருட்டு நகைகளை விற்று கிடைத்த பணத்தில் ரூ.15 லட்சத்துக்கு ஞானசேகரன் தார் ஜீப் வாங்கியதும் கண்டுபிடிக்கபட்டது. ரூ.30 லட்சம் வரை ஆன்லைன் டிரேடிங்கில் ஞானசேகரன் இழந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்.
The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: நகையை திருடி விற்று மாடி கட்டிய ஞானசேகரன் appeared first on Dinakaran.