“அண்ணா எங்கள விட்டுருங்க” கதறிய சிறுமிகள்; பள்ளிக்கு செல்லாமல், 5 சிறுவர்கள் செய்த கொடூரம்..

6 hours ago
ARTICLE AD BOX

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி​யில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 13, 14 வயதான 4 நண்பர்​கள் படித்து வருகின்றனர். ஒன்றாக பள்ளிக்கு சென்று வந்த நண்பர்கள், ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்​தினம் நண்பர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து, கட்டிடப் பணிக்கு செல்​லும் தங்களின் 15 வயது நண்பரை பார்க்க சென்​றுள்ளனர். அங்கு நண்பர்கள் நான்கு பெரும், கட்டிடப் பணியில் ஈடுபட்​டிருந்த நண்பரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அங்குள்ள வீட்​டில் 13 வயதான அக்கா மற்றும் 9 வயதான தங்கை என இரண்டு சிறுமிகள் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர்.

இதைப் பார்த்த நண்பர்கள் 5 பேருக்கும் அந்த சிருமிகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 5 பேரும் சேர்ந்து சிறுமிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.

Read more: “அப்பா உன்ன தொட்டாலும், நீ வெளிய சொல்ல கூடாது” தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உண்மை அறிந்த தாய் செய்த காரியம்..

The post “அண்ணா எங்கள விட்டுருங்க” கதறிய சிறுமிகள்; பள்ளிக்கு செல்லாமல், 5 சிறுவர்கள் செய்த கொடூரம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article