TNEB: தமிழக மின் வாரியத்தில் 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலி! வெளியான அதிர்ச்சித் தகவல்!

3 hours ago
ARTICLE AD BOX
<p>தமிழ்நாடு மின்&zwnj; உற்பத்தி மற்றும்&zwnj; பகிர்மானக்&zwnj; கழகத்தில்&zwnj; காலியாக உள்ள 30 ஆயிரம் கேங் மேன்&zwnj; பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தி.மு.க. அசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.</p> <p><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:&zwnj;</strong></p> <p>வேளாண்&zwnj; வளர்ச்சிக்கும்&zwnj;, தொழில்&zwnj; மேம்பாட்டிற்கும்&zwnj;, வேலைவாய்ப்புகள்&zwnj;உருவாவதற்கும்&zwnj;, இளைய சமுதாயத்தினர்&zwnj; முன்னேற்றம்&zwnj; அடைவதற்கும்&zwnj; முக்கியக் காரணியாக விளங்குவது மாறி வரும்&zwnj; இன்றைய நவீன வாழ்க்கையுடன்&zwnj; பின்னிப்&zwnj; பிணைந்திருக்கும்&zwnj; மின்சாரம்&zwnj; என்று சொன்னால்&zwnj; அது மிகையாகாது.</p> <p>இப்படிப்பட்ட இன்றியமையாத்&zwnj; தன்மை வாய்ந்த மின்சாரம்&zwnj; தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால்&zwnj;, மின்&zwnj; உற்பத்தியைப்&zwnj; பெருக்குதல்&zwnj;, மின்&zwnj; கட்டமைப்புகளை வலுவாக்குதல்&zwnj;, மின்&zwnj; பகிர்மானத்தை விரிவாக்குதல்&zwnj;, பராமரிப்புப்&zwnj; பணிகளை மேற்கொள்ளுதல்&zwnj; ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும்&zwnj;. இந்தப்&zwnj; பணிகள்&zwnj; தொடர்ந்து நடைபெற வேண்டுமானால்&zwnj;, தமிழ்நாடு மின்&zwnj; உற்பத்தி மற்றும்&zwnj; பகிர்மானக்&zwnj; கழகத்தில்&zwnj; உள்ள காலிப்&zwnj; பணியிடங்கள்&zwnj; உடனுக்குடன்&zwnj; நிரப்பப்பட வேண்டும்&zwnj;.</p> <p>தமிழ்நாடு மின்&zwnj; உற்பத்தி மற்றும்&zwnj; பகிர்மானக்&zwnj; கழகத்தில்&zwnj; மின்&zwnj; கம்பியாளர்&zwnj;, கணக்கீட்டாளர்&zwnj;, கேங்மேன்&zwnj; உள்ளிட்ட ஐம்பதாயிரத்திற்கும்&zwnj; மேற்பட்ட பணியிடங்கள்&zwnj; காலியாக உள்ளன. இதில்&zwnj;, கிட்டத்தட்ட முப்பதாயிரம்&zwnj; கேங்மேன்&zwnj; பணியிடங்கள்&zwnj; அடக்கம்&zwnj;.</p> <p><strong>உயிருக்கு உத்தரவாதம்&zwnj; இல்லாத நிலை</strong></p> <p>இதன்&zwnj; காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல்&zwnj; பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும்&zwnj;, பல இடங்களில்&zwnj; மின்&zwnj; மாற்றிகள்&zwnj; மற்றும்&zwnj; மின்&zwnj; கம்பங்களில்&zwnj; ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியர்கள்&zwnj; அனுப்பப்படுவதாகவும்&zwnj;, அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம்&zwnj; இல்லாத நிலை நிலவுவதாகவும்&zwnj;, அவர்கள்&zwnj; மின்&zwnj; பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின்&zwnj; நுகர்வோர்களிடம்&zwnj; கேட்பதாகவும்&zwnj; தகவல்கள்&zwnj; வருகின்றன.</p> <p>இந்தச்&zwnj; சூழ்நிலையில்&zwnj;, முப்பதாயிரம்&zwnj; கேங்மேன்&zwnj; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய இடத்தில்&zwnj;, வெறும்&zwnj; ஐந்தாயிரம்&zwnj; கேங்மேன்களை நிரப்ப தமிழ்நாடு மின்&zwnj; உற்பத்தி மற்றும்&zwnj; பகிர்மானக்&zwnj; கழகம்&zwnj; தமிழ்நாடு அரசிடம்&zwnj; அனுமதி கோரியுள்ளதாகவும்&zwnj;, அந்த அனுமதியைக்கூட தர அரசு தயக்கம்&zwnj; காட்டுவதாகவும்&zwnj; தெரிய வருகிறது.</p> <p>அனுமதிக்கப்பட்ட காலிப்&zwnj; பணியிடங்களை நிரப்பாமல்&zwnj; காலந்தாழ்த்துவது என்பது கடும்&zwnj; கண்டனத்திற்குரியது. மின்&zwnj; கட்டணத்தையும்&zwnj; பன்மடங்கு உயர்த்திவிட்டு, அதற்குரிய சேவையையும்&zwnj; செய்யாமல்&zwnj; இருப்பது ஏற்றுக்கொள்ளக்&zwnj; கூடியதல்ல. இந்த நிலை நீடித்தால்&zwnj;, தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம்&zwnj; கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும்&zwnj;.</p> <h2><strong>காலிப்&zwnj; பணியிடங்களை நிரப்புவதில்&zwnj; கஞ்சத்தனம்&zwnj;</strong></h2> <p>மின்சாரத்&zwnj; தேவைக்கும்&zwnj;, மின்சார விநியோகத்திற்குமான இடைவெளி என்பது எதிர்பார்ப்பிளைவிட அதிகரித்துக்&zwnj; கொண்டே செல்கின்ற இந்தத்&zwnj; தருணத்தில்&zwnj;, செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப்&zwnj; பணியிடங்களை நிரப்புவதில்&zwnj; கஞ்சத்தனம்&zwnj; காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும்&zwnj;.</p> <p>எனவே, முதலமைச்சர்&zwnj; இதில்&zwnj; தனிக்&zwnj; கவனம்&zwnj; செலுத்தி, தமிழ்நாடு மின்&zwnj; உற்பத்தி மற்றும்&zwnj; மின்&zwnj; பகிர்மானக்&zwnj; கழகத்தில்&zwnj; உள்ள முப்பதாயிரம்&zwnj; கேங்மேன்&zwnj; காலிப்&zwnj; பணியிடங்களையும்&zwnj;, இதரப்&zwnj; பணியிடங்களையும்&zwnj; உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழக தொண்டர்கள்&zwnj; உரிமை மீட்புக்&zwnj; குழுவின்&zwnj; சார்பில்&zwnj; வலியுறுத்திக்&zwnj; கேட்டுக்&zwnj; கொள்கிறேன்&zwnj;&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article