Telangana Family Killed in US (Photo Credit: @Weeklyvoice X)

மார்ச் 18, புளோரிடா (World News): தெலுங்​கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்​டம், டேகுலபல்லி பகு​தியை சேர்ந்த தம்பதி மோகன்​ரெட்​டி-பவித்ரா தேவி. இவர்​களுக்கு 2 மகள்​கள். இதில் 2வது மகளான பிரக​திக்​கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்​கும் திரு​மணம் நடந்​தது. இவர்​களுக்கு 2 மகன்​கள். ரோஹித், அவரது மனைவி பிரக​தி​, ரோஹித்​தின் தாயார் சுனி​தா,​ அமெரிக்​கா​வில் புளோரி​டா​வில் (Florida) வசித்து வந்​தனர். PM Narendra Modi: இந்தியா-சீனா உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்து; சீன வெளியுறவுத்துறை வரவேற்பு.!

மூவர் பலி:

இந்​நிலை​யில், இந்​திய நேரப்​படி நேற்று (மார்ச் 17) அதி​காலை 3 மணியள​வில் ரோஹித், அவரது மனைவி, தாயார் மற்​றும் 2 மகன்​கள் என அனை​வரும் காரில் புளோரி​டா​வில் ஷாப்​பிங் செய்ய சென்று கொண்​டிருந்​தனர். அப்போது, பின்​னால் இருந்து வந்த ஒரு டிரக் இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதி (Accident) விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்​தில் பிரகதி (வயது 35), இவரது மகன் அர்​வின் (வயது 8), சுனிதா (56) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இருவர் படுகாயம்:

விபத்தில் சிக்கி ரோஹித் மற்​றும் மற்​றொரு மகன் படுகாயமடைந்தனர். இவர்கள் தற்​போது புளோரி​டா​வில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.