Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் திடீர் என்ட்ரீ கொடுத்த பூர்ணிமா பாக்யராஜ் - எதற்காக?

13 hours ago
ARTICLE AD BOX
<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.&nbsp;</p> <p><strong>ஸ்வாதிக்கு குவியும் பாராட்டு:</strong></p> <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மஹேஷ்க்கு பதிலாக பாட்டி கையால் துணி வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.&nbsp;</p> <p>அதாவது ஸ்வாதி மேடை ஏறி நல்லபடியாக பாடி முடிக்க ரேவதி உட்பட எல்லாரும் அதை பார்த்து சந்தோசப்பட்டு அவளை பாராட்டுகின்றனர்.&nbsp;</p> <p><strong>பூர்ணிமா பாக்யராஜ்:</strong></p> <p>இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்ட்ரி கொடுக்கிறார். தனது குடும்பத்தை தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி.&nbsp;</p> <p>அப்போது கார்த்தியை ட்ரைவர் என அறிமுகம் செய்து வைக்க ராஜேஸ்வரிக்கு இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஒரு மீட்டிங்கில் கார்த்தியுடன் பங்கேற்ற விஷயம் நினைவுக்கு வருகிறது.&nbsp;</p> <p><strong>உண்மையை உடைக்கப் போகும் ராஜேஸ்வரி:</strong></p> <p>தனது பி.ஏ-விடம் விசாரிக்க அவனும் கார்த்திக் ஒரு பிசினஸ் மேன் என்ற உண்மையை சொல்ல ராஜேஸ்வரி இவன் ஏன் இங்க இருக்கான்? சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்லணும் என முடிவெடுக்கிறாள்.&nbsp;</p> <p>இதையடுத்து மகேஷ் ரேவதியிடம் சேர்ந்து நடனமாட போவதாக மாயாவிடம் சொல்ல இது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரிய வருகிறது. பாட்டி இதை தடுக்க ஒரு இலையை பறித்து வந்து மகேஷ் சட்டையில் தேய்க்க சொல்கிறார்.&nbsp;</p> <p>இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>
Read Entire Article