Jyotika: உச்சகட்ட கோபத்திலும் சூர்யாவின் கண்களைப் பார்த்தால்.. ஜோதிகா சொன்ன குடும்ப விஷயம்!

19 hours ago
ARTICLE AD BOX

Jyotika: உச்சகட்ட கோபத்திலும் சூர்யாவின் கண்களைப் பார்த்தால்.. ஜோதிகா சொன்ன குடும்ப விஷயம்!

News
oi-Mohanraj Thangavel
| Published: Sunday, March 2, 2025, 13:12 [IST]

சென்னை: நடிகை ஜோதிகா இப்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் குறித்த தகவல்களை அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் எப்போதும், ஆவலுடன் இருந்து வருகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சூர்யா குறித்து அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.

ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள டப்பா கார்டல் வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு குடும்பமாக குடியேறி விட்டார்கள். அதாவது, ஜோதிகா, சூர்யா அவர்களின் குழந்தைகள் தேவ் மற்றும் தியா ஆகியோர் என அவர்களின் குடும்பம் மட்டுமே மும்பைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளார்கள்.

Jyotika Suriya Jyotika Angry Suriya

இதற்கு காரணம் குழந்தைகளின் கல்வி எனக் கூறப்பட்டாலும், பலரும் சிவக்குமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் பிரச்னை எனக் கூறுகிறார்கள். ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கிசு கிசுக்கள் உலா வருகிறது. மேலும் ஜோதிகா தனது அம்மாவுடன் இருக்க விருப்பப்பட்டு மும்பைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Jyotika Suriya Jyotika Angry Suriya

சூர்யா - ஜோ: இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் கணவர் சூர்யா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், " எனக்கு சில நேரங்களில் கோபம் வரும். அந்த நேரங்களில் சூர்யாவை கோபத்துடன் திட்டலாம் என அவரைப் பார்ப்பேன். ஆனால் அவரது கண்கள் மிகவும், அழகாக இருக்கும் என்பதால் என் கோபம் எல்லாம் காணாமல் போய்விடும்.

Jyotika Suriya Jyotika Angry Suriya

மேஜிக்: இது தொடர்பாக நான் சூர்யாவிடமே கூறிவிட்டேன், உங்களுக்கு அழகான முகம் உள்ளது. அதனால்தான் என்னால் என் கோபத்தைக் கூட உன்னிடத்தில் காட்ட முடியவில்லை என்பதை நான் அடிக்கடி சூர்யாவிடம் கூறுவேன். சூர்யா என் வாழ்க்கையில் நடந்த மேஜிக்" எனக் கூறினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Jyotika Suriya Jyotika Angry Suriya

பாலிவுட்: சூர்யாவும் மும்பைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளதால், அவர் பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதனால்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன புறநானூறு படத்தில் இருந்தும் விலகினார். இப்போது இந்த படம் பராசக்தி என்ற பெயரில் படப்பிடிப்பில் உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

Jyotika Suriya Jyotika Angry Suriya

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Jyotika Opens About Her Angry about Suriya Fans Curiosity
Read Entire Article