ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது

15 hours ago
ARTICLE AD BOX
ஹனி ட்ராப்பிங் மூலம் ISIக்காக உளவு பார்த்த ஆயுத தொழிற்சாலை ஊழியர்

ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2025
06:15 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹனி ட்ராப்பிங் மூலம் ISIக்காக உளவு பார்த்தாக தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (யு.பி. ஏ.டி.எஸ்) ரவீந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளியை ஆக்ராவைச் சேர்ந்த கைது செய்தது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கையாளுபவர்களுடன் ரகசிய இராணுவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹனி ட்ராப்பிங் 

ஹனி ட்ராப்பிங் மூலம் சிக்க வைக்கப்பட்ட அரசு அதிகாரி

அதிகாரிகளின் கூற்றுப்படி, ரவீந்திர குமார் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹஸ்ரத்பூரை தளமாகக் கொண்ட ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார், மேலும் முக்கியமான ஆவணங்களை அணுகும் பதவியில் இருந்தார்.

விசாரணையில் அவர் தினசரி உற்பத்தி அறிக்கைகள், திரையிடல் குழுவின் ரகசிய கடிதங்கள், நிலுவையில் உள்ள கோரிக்கை பட்டியல் மற்றும் ட்ரோன்கள் மற்றும் ககன்யான் திட்டம் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட மிகவும் ரகசிய தகவல்களை ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய ஒரு பெண்ணுடன் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.

நேஹா சர்மா என்று காட்டிக் கொண்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் ரவீந்திரனைத் தொடர்பு கொண்டார்.

அந்த பெண்ணினால் தூண்டப்பட்டு, அவர் வாட்ஸ்அப் மூலம் ரகசிய ஆவணங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article