IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?

2 days ago
ARTICLE AD BOX
<p>துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.&nbsp;</p> <p><strong>மந்தமான ரன்ரேட்:</strong></p> <p>இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் பவுண்டரிகளாக அடித்து ரன்களை குவிக்கத் தொடங்கினாலும் பாபர் அசாம் 26 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இமாம் 10 ரன்னில் அவுட்டானார்.&nbsp;</p> <p>9.2 ஓவர்களில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ரிஸ்வான் - செளத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடி வருகின்றனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வருவதால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்து வருகிறது.&nbsp;</p> <p><strong>சுழல் தாக்குதல்:</strong></p> <p>26வது ஓவரில்தான் பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. இதுவரை 60க்கும் மேற்பட்ட பந்துகள் டாட் பந்துகளாகியுள்ளது. ரோகித் சர்மா சுழற்பந்துவீச்சாளர்களான அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரை மாறி, மாறி பயன்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p> <p><strong>கியரை மாற்றிய ரிஸ்வான்:</strong></p> <p>மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைப்பு தரும் நிலையில், தற்போது ஆட்டத்தில் அதிரடிக்கு முகமது ரிஸ்வான் மாறியுள்ளார். இதுவரை மிகவும் நிதானமாக ஆடி வந்த செளத் ஷகில் - முகமது ரிஸ்வான் இருவரும் தற்போது அடித்து ஆடத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p> <p>இன்னும் 24 ஓவர்கள் இருப்பதால் அடித்து ஆட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் அணியின் வீரர்களை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ரோகித் சர்மா தடுமாற வைத்து வருகிறார்.&nbsp;</p> <p><strong>நெருக்கடியில் பாகிஸ்தான்:</strong></p> <p>முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா என மாறி, மாறி இந்திய பந்துவீச்சாளர்கள் வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.&nbsp;</p> <p>இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணியில் முன்னேற முடியும். இதனால், கட்டாய வெற்றி பெற வலுவான இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் பாபர் - செளத் ஷகில் ஜோடிக்குப் பின்னர் சல்மான் அகா, தையப் தாஹீர், குஷ்தில் ஷா உள்ளனர். இவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.</p> <p>இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறிவிடும். இதனால், இந்திய வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற முழு முனைப்பில் ஆடி வருகின்றனர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article