ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. போட்டி பிப்ரவரி 20 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்தத் தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளன. துபாயில் உள்ள ஆடுகளம் பொதுவாகவே சுழற் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது துபாய் மைதானத்தில் பெரிய அளவில் இந்திய அணிக்குக் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் போட்டிக்கு இதுவரை பயன்படுத்தப்படாத புதிய பிட்ச் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான சூழ்நிலை இருக்கும். இந்த மைதானத்தில் இரண்டாவதாக பந்துவீசுவதிலும் சில சிக்கல்கள் உள்ளன.
துபாயில் மாலை நேரத்தில் அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், அது இரண்டாவதாக பந்து வீசும் அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும். பந்து பந்துவீச்சாளர்களின் கையில் இருந்து வழுக்கிக் கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் நான்கு அணிகளும், குரூப் பி பிரிவில் நான்கு அணிகளும் இடம் பெற்று இருக்கின்றன. குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே விளையாடி விட்டன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் ஏ புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சுருக்கமாக, துபாய் மைதானம் சுழற் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம், குறிப்பாக இரண்டாவது பந்து வீசும் அணிக்கு சிக்கல் உள்ளது.