ARTICLE AD BOX
Champions Trophy: இந்தியா கப் அடிக்கனும்..வட இந்தியாவில் கிரிக்கெட் ஜூரம்- ஜெகஜோராக பிரார்த்தனைகள்!
டெல்லி: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா அணி வெல்ல வேண்டும் என்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.
நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்றைய போட்டியை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணி, வெல்ல வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
ஆரத்தி வழிபாடு

உ.பி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சாரங் நாத் மகாதேவ் ஆலயத்தில் இந்தியாவின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.
வீரர்கள் படத்தை வைத்து யாகம்

உ.பி, கான்பூரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராதா மகாதேவ் கோவிலில், வீரர்களின் போட்டோக்களை வைத்து யாகம் நடத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருநங்கைகள் யாகம்

உபி. பிரக்யாராஜில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக திருநங்கைகள் ஒருங்கிணைந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்; இந்த யாகத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் படங்களை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.
முகமது ஷமி உறவினர்கள் சிறப்பு தொழுகை

உபி, மொரதாபாத்தில், இந்திய அணி வீரர் முகம்மது ஷமியின் உற்வினர்கள், இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்
அயோத்தியில் யாகம்

உ.பி, அயோத்தியில் இந்திய அணியின் வெற்றிக்காக சாதுக்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகளை செய்தனர்.
பீகார் பாட்னாவில் சிறப்பு யாகம்
பீகார், பாட்னாவில் இந்திய அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
சிறப்பு ஏற்பாடுகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டியை காண்பதற்காக விளையாட்டு மைதாங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சி மைதானத்திலும் இத்தகைய பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டிருக்கிறது.
- இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்ப்.. நாமும் பதிலடியாக வரிகளை விதிக்கணும்! ஜிடிஆர்ஐ திட்டவட்டம்
- டிரம்ப் வைத்த ஆப்பு.. கதறியபடி இந்தியா, சீனாவிடம் உதவி கேட்கும் முகமது யூனுஸ்! கசிந்த பரபரப்பு தகவல்
- டிரம்பின் அடுத்த வெடி! இந்த 2 நாட்டினர் அமெரிக்காவில் கால் வைக்க முடியாது! லிஸ்டில் இந்தியா இருக்கா?
- அமெரிக்காவுக்கு வரியை குறைக்கும் இந்தியா.. மிரட்டியே காரியம் சாதிக்கும் டிரம்ப்.. பெரிய ட்விஸ்ட்
- "பணிந்து விட்டார்கள்".. இந்தியாவை குத்திக்காட்டி பேசிய டிரம்ப்.. தொடரும் அமெரிக்காவின் அடாவடி
- இந்தியாவுக்கு இனி ரஷ்யா வேண்டாம்.. எங்களிடம் தான் ராணுவ தளவாடங்களை வாங்கனும்.. அழுத்தும் அமெரிக்கா
- முதலில் உளவு கப்பல்.. இப்போது சீக்ரெட் கருவிகள்.. மாலத்தீவு கடலில் ஆட்டம் போடும் சீனா! பதற்றம்
- "இந்தியா ரொம்ப வரி போடுது.." வெடியாக வெடித்த டிரம்ப்! அடுத்து சொன்ன பாயிண்டு.. அலறும் உலக நாடுகள்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்: 'தேவதாசி முறைக்கு' எதிராக முதல் போர்க்குரல்-அடக்குமுறைகள்தான் எத்தனை!
- ‛நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. மறக்காமல் உடனே விண்ணப்பம் செய்யுங்க