ARTICLE AD BOX
பிஎஸ்என்எல் நிறுவனம் 5 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்ஸ், 90 நாள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறை சேவையில் முன்னணியில் இருந்தாலும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலை மற்றும் மதிப்புமிக்க ரீசார்ஜ் திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மொபைல் பயனர்களுக்கு டேட்டாவைத் தவிர்த்து மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கியுள்ளது பிஎஸ்என்எல். இதன்மூலம் ரீசார்ஜ் திட்டங்களுக்குள் டேட்டாவிற்கு கூடுதல் செலவு செய்வதைத் தவிர்க்கலாம்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் ஒரு கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, டேட்டா மற்றும் இலவச SMS பெற முடியும். அன்மையில் பிஎஸ்என்எல் அதன் எக்ஸ் தளத்தின் வழியாக அதன் ரூ.439 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விவரங்களை அறிவித்துள்ளது. இந்த சலுகை பயனர்கள் இந்தியா முழுவதும் வரம்பற்ற குரல் அழைப்பையும், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள MTNL பகுதிகள் உட்பட இலவச தேசிய ரோமிங்கையும் அனுபவிக்க அனுமதிக்கிறது.
இந்த ப்ரீபெய்டு திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது, மேலும் தினமும் 300 இலவச SMSகளையும் வழங்குகிறது. 90 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், இந்தத் திட்டத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.4.90 செலவாகும். இருப்பினும், இந்த ரீசார்ஜில் எந்த டேட்டா சலுகைகளும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசியக் குறியீட்டு மொழியில் பேசும் AI அசிஸ்டெண்ட்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

புதிய சந்தாதாரர்களை ஈர்க்க BSNL பல்வேறு உத்திகளை வகுத்துள்ளது. இதில் 4G சேவைகளை விரைவாகப் பயன்படுத்துதல், 5G சோதனையைத் தொடங்குதல் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் மேம்பாடுகள் ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், பல பயனர்கள் நெட்வொர்க் நம்பகத்தன்மை மற்றும் அடிக்கடி ஏற்படும் அழைப்பு துண்டிப்புகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தினர். இது 3,00,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் சரிவுக்கு வழிவகுத்தது.

4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நடப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சோதனையும் தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் ஐபோன் 17 ரிலீஸ்! டிசைன், ஹார்டுவேரில் வெற லெவல் அப்டேட்!