ARTICLE AD BOX
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீது கோவில் மற்றும் தர்கா இருக்கும் நிலையில் அது தொடர்பாக இந்து அமைப்பினர் இன்று போராட்டமாக அறிவித்துள்ளனர். அதாவது திருப்பரங்குன்றத்தில் மலைமீது கோவில் செல்லும் வழியில் இஸ்லாமியர்கள் அசைவம் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதற்கு தமிழகத்தில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து தான் தற்போது போராட்டம் அறிவித்துள்ளனர். போராட்டம் மற்றும் தர்ணா நடத்துவதற்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று முதல் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.