ARTICLE AD BOX

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது.
புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?. “தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது, இதையெல்லாம் மடைமாற்றி பழனிசாமி பாஜகவின் விஸ்வாசத்தை காட்டுகிறார்”