ARTICLE AD BOX
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்த சூழலில் அங்கு 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயக்குமாருடன் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50 பேர் கைதானார்கள்.