AI ஆதிக்கம்.. வேலை வாய்ப்புகளை குறைக்கும் DBS வங்கி.. 4000 பேருக்கு வேலை காலி..!!

3 hours ago
ARTICLE AD BOX

AI ஆதிக்கம்.. வேலை வாய்ப்புகளை குறைக்கும் DBS வங்கி.. 4000 பேருக்கு வேலை காலி..!!

News
Published: Tuesday, February 25, 2025, 14:57 [IST]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று பல்துறை நிறுவனங்களிலும் விரைவாகப் புகுந்து வருகிறது. வங்கி துறையிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் முன்னணியில் உள்ள சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கி, இதன் காரணமாக அடுத்து மூன்று ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை (10%) குறைக்க போவதாக அதன் தலைமை அதிகாரி பியூஷ் குப்தா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் (IT) லாபி குழு நாஸ்காம் (NASSCOM) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியபோது வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் குறித்து பேசிய அவர், AI ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும், வங்கித் துறையில் உள்ள பல வேலைகளுக்கு இப்போது ஆட்டோமேஷன் (automation) தேவையானது என்றும் கூறினார்.

AI ஆதிக்கம்.. வேலை வாய்ப்புகளை குறைக்கும் DBS வங்கி.. 4000 பேருக்கு வேலை காலி..!!

AI ஒரு சாதாரண தொழில்நுட்ப மேம்பாடு இல்லை. இது ஒரு நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டது. முன்பு, எந்தவொரு தொழில்நுட்ப மாற்றமும் இப்படிப்பட்ட வேகத்தில் வளர்ந்ததில்லை என்று குப்தா தெரிவித்துள்ளார். DBS வங்கி கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை வாய்ப்புகளை குறைக்கப்போகிறது, இதன் முக்கியக் காரணம் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி ஆகும்.

பொதுவாக, ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழும்போது, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால் AI அதிக தானியங்கி செயல்களை (automation) கொண்டிருக்கிறது, அதனால் புதிய வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகாது என்று DBS வங்கி தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அடுத்த மூன்று ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை குறைக்கப்போவதாக கணிக்கப்படுகிறது.

மகளிர் உதவித் தொகை டூ பட்ஜெட்.. புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?. இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை!.மகளிர் உதவித் தொகை டூ பட்ஜெட்.. புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?. இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை!.

DBS வங்கியின் தொழில்நுட்ப வளர்ச்சி. DBS வங்கி கடந்த 10-15 ஆண்டுகளாக டிஜிட்டல் (digital) மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 2016-17 ஆண்டுகளில், வங்கி ஒரு பெரிய டிஜிட்டல் மாற்றத்தை (digital transformation) மேற்கொண்டது. அப்போது 1,600 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அனைவரும் புதிய வேலைகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கு காரணம், அப்போது AI வளர்ச்சியடையவில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.

AI வளர்ந்திருப்பதால், முன்பு மனிதர்கள் செய்த பணிகளை AI செய்துவருகிறது. இதனால் வங்கி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக, வாடிக்கையாளர் தொடர்பு, கடன் அங்கீகாரம், பணியமர்த்தல் போன்ற செயல்பாடுகளில் AI பயன்படுத்தப்படுகிறது.

DBS வங்கியின் 4,000 பணியாளர்கள் குறைப்பு என்பது முழுமையாக நிரந்தர ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஒப்பந்த அடிப்படையிலான (contract-based) மற்றும் தற்காலிக (temporary) பணியாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையான பணிநீக்கம் (natural attrition) காரணமாகவும் பணியாளர் எண்ணிக்கை குறையலாம். DBS வங்கி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே AI தொழில்நுட்பத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

வேலைக்கு சேர கிரெடிட் கார்டு கட்டாயமா?. ரெட்டிட் தளத்தில் வைரலாகும் பதிவால் அதிர்ச்சி!.வேலைக்கு சேர கிரெடிட் கார்டு கட்டாயமா?. ரெட்டிட் தளத்தில் வைரலாகும் பதிவால் அதிர்ச்சி!.

வாடிக்கையாளர் சேவையில் AI-ஐ முழுமையாக பயன்படுத்துவதில் வங்கி எச்சரிக்கையாக உள்ளது. ஆனால், AI மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடையும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என DBS அறிவித்துள்ளது. கடன் வழங்குதல் என்பது வங்கியில் மிக முக்கியமான பகுதி. முந்தைய முறையில், மனிதர்களால் ஆராயப்பட்டு கடன் வழங்கப்பட்டது. ஆனால், AI இப்போது கடன் பெறுபவரின் தகவல்களை கணிப்பதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட பரிந்துரைகளும் வழங்குகிறது

DBS வங்கி புதிய பணியாளர்களை தேர்வு செய்யும் முறையிலும் AI-ஐ பயன்படுத்துகிறது. AI உதவியுடன் பணியாளர் தேர்வு தானியங்கி முறையில் நடைபெறும். இதனால் மனித வளம் (HR) துறையில் வேலை வாய்ப்பு குறையலாம். DBS வங்கி மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும் AI வளர்ச்சியின் தாக்கத்தால் வேலை வாய்ப்புகளை குறைக்கும் நிலைக்கு வருகின்றன. DBS வங்கி AI-ஐ முழுமையாகக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் மனித ஆதாரங்களை முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதையும் உணர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Artificial Intelligence Reduces jobs : 4000 Employees affected at DBS Bank!!

AI is transforming industries, and DBS Bank is no exception. As automation takes over, job roles are evolving, highlighting the need for reskilling and adaptation in the ever-changing workforce.
Other articles published on Feb 25, 2025
-->
Read Entire Article
LEFT SIDEBAR AD

Hidden in mobile, Best for skyscrapers.