Actress Priyamani: 'கல்யாணத்தால் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ட்ரோல்கள் என்னை பாதித்தது..' நடிகை பிரியாமணி வேதனை..

3 hours ago
ARTICLE AD BOX

'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகள்

சமீபத்தில் ஃபிலிம்ஃபேர்க்கு அளித்த பேட்டியில், பிரியாமணி கூறியதாவது, “எனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோது, என்னைப் பற்றி உண்மையாக அக்கறைபடுபவர்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால், எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை, தேவையற்ற வெறுப்புச் செய்திகள் என்னைச் சுற்றி வர ஆரம்பித்தன, 'லவ் ஜிஹாத்' போன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக வந்தன. நாங்கள் குழந்தைகள் பெற்றால், அவர்கள் ISIS இல் சேர்வார்கள் என்று கூட அவர்கள் கூறி விமர்சித்தனர்.”

பெரிதாக பாதித்தது

தான் பிரபலம் என்பதால் மக்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை தான் புரிந்து கொண்டாலும், அந்த கருத்துகள் தன்னைப் பெரிதும் பாதித்ததாக அவர் கூறினார். “நான் ஊடகத் துறையைச் சேர்ந்தவள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவள் என்பதால், நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இதில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவரை ஏன் தாக்க வேண்டும்? அந்த நபர் யார் என்பது கூட உங்களுக்குத் தெரியாது.

மதம் பற்றிய பேச்சு

நிறைய செய்திகள் வந்ததால் அவை என்னை 2லிருந்து 3 நாட்களுக்கு உள்ளாகவே என்னை மிகவும் பாதித்தது. இப்போதும் கூட, நான் அவரோடு புகைப்படம் போட்டால், வரும் பத்து கருத்துகளில் ஒன்பது கருத்துகள் எங்கள் மதம் அல்லது சாதி பற்றியதாகவே இருக்கும்,” என்று கூறினார்.

தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை

இந்த கருத்துகளுக்கு நானும் என் கணவரும் பதிலளிக்க மாட்டோம் என்று கூறிய பிரியாமணி, 'எறிகிற தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்' என்று நினைக்கிறேன். 'ட்ரோல்களுக்கு பதில் கூறி ஒரு நிமிடத்தில் அனைத்தையும் கெடுக்க விரும்பவில்லை' என்றும் கூறினார்.

குடும்பத்தை பாதித்தது

முன்னதாக அவர் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது, விமர்சனங்கள் எல்லாம் என்னை பாதித்தது. என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தை மற்றும் தாயையும் பாதித்தது. ஆனால், என் கணவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். அவர், 'என்ன நடந்தாலும், அனைத்தையும் முதலில் நான் சமாளிப்பேன். என் கையைப் பிடித்து, ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இரு' என்று கூறினார்.

ஒன்றாக பயணிப்போம்

ஏனென்றால், நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்த காலத்திலேயே, எனக்கு எதிராக பல வதந்திகள் வந்தன. 'என்னுடன் இரு, என்னை நம்பு' என்று நான் அவருக்குச் சொன்னேன். நாங்கள் இணைந்தே இந்த முடிவை எடுத்தோம். எங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தோம். எனவே, புயலாகட்டும், சூரிய ஒளியாகட்டும், நாங்கள் ஒன்றாக இந்தப் பாதையில் நடப்போம். என உறுதியாக கூறினார்.

பிரியாமணியின் படங்கள்

பிரியாமணி சமீபத்தில் வெளியான மலையாளத் திரில்லர் 'ஆபிசர் ஆன் டியூட்டி' படத்தில் நடித்தார். 2024 ஆம் ஆண்டில், தெலுங்கு படம் 'பமா கலாபம் 2 படத்திலும், ஹிந்தி படங்களான 'ஆர்டிகிள் 370' மற்றும் 'மைதான்' ஆகியவற்றிலும் நடித்தார். அவர் இப்போது, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article