ARTICLE AD BOX
A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்தாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, அவர் நலமுடன் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவர்களிடம் பேசிய பின் மக்களிடம் கூறி இருந்த நிலையில், தற்போது ஏ.ஆர். ரஹ்மான் நலமுடன் வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.