50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

4 hours ago
ARTICLE AD BOX

50 – இடனறிதல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
        இடங்கண்ட பின்னல் லது

கலைஞர் குறல் விளக்கம்  – ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
        ஆக்கம் பலவுந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
        போற்றார்கண் போற்றிச் செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.

494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
        துன்னியார் துன்னிச் செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
        நீங்கின் அதனைப் பிற

கலைஞர் குறல் விளக்கம்  – தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம் தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

496. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
        நாவாயும் ஓடா நிலத்து

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

497. அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
        எண்ணி யிடத்தாற் செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

498. சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
        ஊக்கம் அழிந்து விடும்

கலைஞர் குறல் விளக்கம்  – சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

499. சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்
        உறைநிலத்தோ டொட்ட லரிது

கலைஞர் குறல் விளக்கம்  – பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும். அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

  1. காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு

கலைஞர் குறல் விளக்கம்  – வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

Read Entire Article