5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு ரூ.122 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

13 hours ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படும் என கடந்த 2024-25ம் ஆண்டின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில், 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைப்பதற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதிகளுடன் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்ட உள்ளது. அதேபோல், கும்பகோணம் அரசு மருத்துவனை, தென்காசி அரசு மருத்துவமனை, காங்கேயம் அரசு மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு ரூ.122 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article