ARTICLE AD BOX
”தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்” என டாக்டர் ராமதாஸ் அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி ஆட்சியில் இருக்கும். ஆனால், கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் அது நடக்காமல் போனது. ஆனால், வருகிற 2026-ல் ‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். பாட்டாளி மக்கள் கட்சி இப்போதும் வலிமையாகத் தான் இருக்கிறது.
இன்னும் கேட்டால், பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை அண்மைக் காலங்களில் அதிகரித்து இருக்கிறது. அண்மையில் உழவர் பேரியக்கத்தின் மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தினோம். வெறும் 25 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மாநாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். அடுத்து பிப்ரவரி 23-ம் தேதி கும்பகோணத்தில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டை சிறப்பாக நடத்தினோம்.
மே 11-ம் நாள் சித்திரை முழுநிலவு நாள் இளைஞர் பெருவிழா நடைபெற உள்ளது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான வலிமை தெரியும். தேர்தல் முடிவுகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. 2026-ம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அது தான் உங்கள் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலாக இருக்கும்’’ எனத் தெரிவித்து உள்ளார்.