சிலிக்கான் சிட்டி என்ற அழைக்கப்படும் பெங்களூருவில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர், தான் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறேன் ஆனாலும் எனது வாழ்க்கை ஸ்திரத்தன்மையாக இல்லை என்று மனம் வெதும்பி தனது அனுபவங்களை சமூக வலைதளமான ரெடிட்டில் பகிர்ந்துள்ளார். ரெடிட் தளத்தில் onepoint5zero என்ற பயனர், ஒரு பெருநகர வாழ்க்கை ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்ற தலைப்பில் தனது மனதில் உள்ள குமறல்களை கொட்டி தீர்த்துள்ளார்.
அவர் அந்த பதிவில், நான் மாதம் ரூ.1.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறேன். ஆனால் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தை பராமரிப்பதற்கான நிதிச் சுமை மற்றும் ஏற்கனவே உள்ள கடனை திருப்பி செலுத்துதல் போன்றவற்றுக்காக செலவழித்தற்கு போக மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மட்டுமே சேமிப்புக்கு கிடைக்கிறது.

கணிசமான வருமானம் ஈட்டுவது, லவ் பண்ணுவது மற்றும் உற்சாகம் மற்றும் கவர்ச்சிகரமான வழக்கத்தால் நிறைந்த பெங்களூரு வாழ்க்கையை அனுபவிப்பது என்ற ஆசைகள் எனது இளம் பருவத்தில் ஒரு கனவாக இருந்தது. ஆனால் இப்போது அதை கடந்து செல்லும்போது, எந்த நேரத்திலும் அழுத்தத்தின் கீழ் விரிசல் ஏற்படக்கூடிய ஒரு மென்மையான மலர் பானையை போல உடையக்கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது.
எனது முதன்மை பயம் நிதிப் பாதுகாப்பின் நிலையற்ற தன்மையிலிருந்து வருகிறது. அவசர தேவைகளுக்கு அதிகம் சேமிக்காததால், வேலையை இழக்கும் வாய்ப்பு அச்சுறுத்தலாக உள்ளது. ஒரு வேளை வேலையில்லாமல் இருந்தால், மாதந்திர செலவுகள், இஎம்ஐ போன்றவற்றால் எனது சேமிப்புகள் நான்கு மாதங்களுக்குள் குறைந்து விடும்.
தற்போது எனது வருங்கால மனைவி ஒரு பிஜியில் தங்கி உள்ளார். எனவே ஒரு வாடகை பிளாட் தேடும் எண்ணம் அதிகமாக உள்ளது. நகரத்தின் ரியல் எஸ்டேட் மிகவும் விலை உயர்வாக உள்ளதால் எனது பதட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. சொந்த ஊரில் வசிக்கும் எனது பெற்றோர்கள் எனது கொடுக்கும் மாத தொகையை நம்பித்தான் உள்ளார்கள்.
அது அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். பலர் நல்ல சம்பளம் என்று கருதும் அளவுக்கு சம்பாதித்தாலும் அடிப்படை தேவைகளை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். நகரத்தின் உயர்ந்து வரும் பணவீக்க விகிதங்கள்,மிதமான தரமான உணவு, மளிகை பொருட்கள், வீட்டு வசதி மற்றும் சேவைகளை பெறுவது கூட நியாயமற்ற அதிக விலையில் வருகிறது.
பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் மலிவான விருப்பங்களை தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் தரமற்ற தரத்தை விளைவிக்கிறது இதனால் அவர்கள் முடிவில்லாத நிதி மற்றும் உணர்ச்சி சோர்வில் சிக்கி கொள்கின்றனர். இந்த அன்றாட சவால்களை நான் எதிர்கொள்ளும்போது, இந்த போராட்டம் பெங்ளூருக்கு மட்டும் உரியதா அல்லது நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் இதே போன்ற கஷ்டங்களை அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஒரு காலத்தில் லாபகரமான சம்பளமாக கருதப்பட்டதை சம்பாதிப்பவர்களுக்கு வாழ்க்கை எப்போது இவ்வளவு கடினமாக மாறியது என்று ஆச்சரியப்படுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார். இவரின் இந்த பதிவு பல இளம் தொழில் நிபுணர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தத்தை பற்றிய மிகவும் வெளிப்படையான மற்றும் உண்மையான பதிவாக பார்க்கப்படுகிறது.
Written by: Subramanian