ARTICLE AD BOX
Published : 22 Feb 2025 06:00 AM
Last Updated : 22 Feb 2025 06:00 AM
மகா கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வருவாய்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்

மகா கும்பமேளா மூலம் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது:
வரும் 2027-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பாரதம் எட்டும். இந்த லட்சியத்தை எட்ட உத்தர பிரதேசம் உறுதுணையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக மாநில அரசு சார்பில் புதிதாக 10 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.28 லட்சம் கோடியை எட்டி உள்ளது. பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவால் மாநிலத்தின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த விழாவால் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களால் உத்தர பிரதேச விவசாயிகளின் வருவாய் 1.5 மடங்காக அதிகரித்து உள்ளது. அனைத்து துறைகளிலும் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2029-ம் ஆண்டில் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுக்கும்.
இதற்காக தொழில் துறை, விவசாயம், சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, வரி வசூல், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சேவை துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது உத்தர பிரதேசத்துக்கு ரூ.40 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. இதில் ரூ.15 லட்சம் கோடி மாநிலத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 60 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர் குழு நீருக்கடியில் ஆய்வு
- ஓடிபி இல்லாமல் வங்கி கணக்கை ஹேக் செய்யும் மோசடி கும்பல்
- வன உயிர்கள் பாதுகாப்புக்கு தொடர்ந்து பாடுபடும் அசாமின் பூர்ணிமா தேவிக்கு 'டைம்' இதழ் பாராட்டு
- சமூக வலைதளங்களில் பாராட்டினால் முத்திரை குத்தும் போக்கு: நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை