ARTICLE AD BOX
Published : 11 Mar 2025 05:31 AM
Last Updated : 11 Mar 2025 05:31 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி இருவருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து இருவரும் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- 3-வது பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்: தெலுங்கு தேசம் எம்.பி. அறிவிப்பு
- அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும்: முதல்வர் பட்னாவிஸும் கூறியதால் வலுக்கும் எதிர்ப்பு
- தெலங்கானா சட்டமேலவை தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயசாந்தி மனு தாக்கல்
- போபாலில் மேடை சரிந்து காங்கிரஸ் நிர்வாகிகள் காயம்