ARTICLE AD BOX
Published : 03 Mar 2025 06:07 AM
Last Updated : 03 Mar 2025 06:07 AM
சென்னையில் பயணிகள் வசதிக்காக இன்று முதல் 4 புதிய மின்சார ரயில் சேவை

சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - ஆவடி மின்சார ரயில் சேவை உள்பட 4 மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் சேவை இன்று (மார்ச் 3) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் 10 லட்சம் பயணிகள் தினசரி பயணிக்கின்றனர். இந்த வழித்தடங்களில் பயணிகள் தேவை அடிப்படையில், அவ்வப்போது புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது, 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு முற்பகல் 11.15 மணிக்கு ஒரு மின்சார ரயில் (43013), ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25 மணிக்கு ஒரு மின்சார ரயில் (43006), சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கு ஒரு மின்சார ரயில் (42035), கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கு ஒரு ரயில் (42014) ஆகிய 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் சேவைகள் திங்கள்கிழமை (மார்ச் 3) முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை